Wednesday 1 February 2017

நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படும்: 


                                                                  ஓ.பன்னீர்செல்வம்

OPS   நீர்ஆதாரங்களை மேம்படுத்தும் மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

 நீர்வள ஆதாரத்தைப் பெருக்குவது மிகவும் முதன்மையான பணி. இதன் மூலம் நீர் ஆதாரங்களைப் பராமரித்து, நீரை முறையாக சேமித்து வைத்தால், கடும் வறட்சியையும்  எளிதில் எதிர்கொள்ள முடியும்.

நீர் ஆதாரங்களை மக்கள் பங்களிப்புடன் பாதுகாத்து வந்த முறைதான் குடிமராமத்து முறை. இந்த முறை காலப்போக்கில் மறைந்து, அரசே இந்தப் பணிகளைச் செய்ய நேரிட்டது.

இதனால் இந்த நீர் ஆதாரங்களின் பராமரிப்பில், மக்களின் ஈடுபாடு குறைந்து விட்டது. அதனையடுத்துதான் குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், பாசன அமைப்புகள் 10 சதவீத பங்களிப்பினை, பொருளாகவோ அல்லது மனித ஆற்றலாகவோ வழங்க முன்வந்தால், ரூ.10 லட்சம்  வரையான திட்டப்பணிகளுக்கு, நிதி உதவி வழங்கி, அவர்களே அப்பணியைச் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஆறுகளைச் சுத்தம் செய்தல், குளங்களைச் சீரமைத்தல், கால்வாய்களைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை இந்தத் திட்டத்தின் மூலம் சீரமைக்கலாம்.  ரூ.100 கோடி ஒதுக்கீடு: இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்களும், அமைப்புகளும், மாவட்ட ஆட்சியரை அணுகி, இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
ந்த ஆண்டு ரூ.100 கோடி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுமக்களும், மாவட்ட ஆட்சியரை அணுகி தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு ரூ.300 கோடி: திட்டப் பணிகள் அனைத்தும் 2017 மார்ச் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி அடுத்த ஆண்டு ரூ.300 கோடியாக உயர்த்தப்படும். அது படிப்படியாக மேலும் உயர்த்தப்பட்டு, அடுத்த ஓரிரு ஆண்டுகளில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும்.

64 புதிய கல்லூரிகள்: உயர்கல்விக்கு தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 64 புதிய கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியைப் பொருத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

வறட்சி நிதி கிடைக்கும்: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.39,565 கோடி கேட்டுள்ளோம். மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது. அந்தக் குழு விரைவில் அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறினார். 

Monday 16 January 2017

       
         Pongal celebration in our college...  :-)

Monday 19 December 2016

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதுமேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: - புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதன் வரிசை எண்ணில் "L" என்ற எழுத்து பொறிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 40 நாட்களை கடந்தும் நாட்டில் பணத்தட்டுப்பாடு சீரடையாத நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால்  நிலைமை கொஞ்சம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், அந்த நோட்டுகள் சீராக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤